Home சினிமா கோலிவுட் விஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா – கொந்தளித்த மிஷ்கின்

விஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா – கொந்தளித்த மிஷ்கின்

0
விஷால் மிஷ்கின்

விஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா என ZEE5 வெப் சீரியஸ் துவக்க விழாவில் கொந்தளித்த மிஷ்கின். துப்பறிவாளன் 2 விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் என்ன பிரச்சனை?

துப்பறிவாளன் 2

துப்பறிவாளான் படத்தின் இரண்டாம் பாகம் விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகி வந்தது. படம் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மிஷ்கின் அதிக சம்பளம் கேட்டதாகவும், மற்ற மொழி ரீமேக் ரைட்ஸ் விற்பனை செய்யும் பணம் எனக்கே என மிஷ்கின் கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் துப்பறிவாளன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. உடனே விஷால் துப்பறிவாளன் படத்தை தானே இயக்கப்போவதாக கூறினார்.

மிஷ்கின் வைத்த கட்டளைகள்

சில தினங்களுக்கு முன்பு விஷாலுக்கு மிஷ்கின் எழுதிய 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதன்பிறகு மிஷ்கின், விஷால் மீது உச்சகட்ட கோபத்திற்கு சென்றுவிட்டார். விஷால் மீது நடவடிக்கை எடுக்க முயல்வதாக செய்திகள் வெளியாகின.

காண்ணாமூச்சி வெப்சீரிஸ்

ZEE5-ல் வெளியாக உள்ள கண்ணாமூச்சி வெப்சீரிஸ் துவக்கவிழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் ஆக்ரோசமாகப் பேசினார்.

விஷால் ஒரு பச்சை துரோகி. படத்திற்கான NOC-யை என்னிடம் இருந்து பெற்றுவிட்டு இப்போது என்னைத் தவறாகப் பேசுகிறான்.

அவனால் ஒரு கதை எழுத முடியுமா? என்னைப்போன்று படித்திருக்கிறானா? கடனில் தவிப்பதாகச் சொன்னான்.

வேறு ஒரு தயாரிப்பாளரிடம் ஓகே சொன்ன கதையை அவன் கேட்டான் என தயாரிக்க ஒப்புக்கொண்டேன். பிடிவாதம் பிடித்து என்னை ஒப்புக்கொள்ள வைத்தான்.

கடைசியாக என் மீது அவதூறாகப் பேசி செய்திகளை வெளியிடுகிறான். இனிமேல் அவனால் நிம்மதியாக தூங்கமுடியாது. நான் யாரென்று கட்டுகிறேன் என கொந்தளிப்புடன் பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version