Home Latest News Tamil தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,141 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னை: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவராகள் எண்ணிக்கை 2,141 ஆக பதிவானதால் இதுவென்றால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 23,065 பேர் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 26,736 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று நோய் தொற்று உறுதியான 2,141 பேரில் மொத்தம் 1,280 பேர் ஆண்கள், 861 பேர் பெண்கள் ஆவர்.

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் 45 அரசு மற்றும் 36 தனியார் ஆய்வுமையங்கள் என மொத்தம் 81 மையங்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகுன்றன.

நேற்று ஒரே நாளில் 1,017 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28,641 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 49 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 625 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,373 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு 115, காஞ்சிபுரம் 55, திருவள்ளூர் 123, என புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version