Home அரசியல் மோடி காலாவதியாகிவிட்டார் – மம்தா பானர்ஜி

மோடி காலாவதியாகிவிட்டார் – மம்தா பானர்ஜி

0
மோடி காலாவதியாவிட்டார்

மோடி காலாவதியாவிட்டார் என ஃபானி புயல் குறித்து மோடியிடம் பேசாததற்கு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஃபானி புயல் ஒரிஸாவில் கரையைக் கடந்து மேற்குவங்கம் சென்றது. இதுகுறித்து பாதிப்பை அறிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜிக்கு போன் செய்தார்.

ஆனால் மம்தா பானர்ஜி மோடியிடம் பேசவில்லை. பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரே திரும்ப கூப்பிடுவார் என மோடிக்கு மம்தா அலுவலகத்தில் இருந்து பதில் கூறியுள்ளனர்.

இரண்டாவது முறை மோடி ஃபோன் செய்தும் பலனில்லை. இதனால் மம்தா என்னிடம் பேசக்கூட மாட்டேன் என்கிறார் என மோடி புலம்பினார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, தேர்தல் நேரம் என்பதால் மோடி பாசாங்கு செய்கிறார். அவருடைய கருணை எங்களுக்குத் தேவையில்லை.

காலாவதியானவரிடம் எனக்கு பேச விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.  முதல்வர் இல்லாமல் தலைமை செயலாளரையும் மூத்த அதிகாரிகளையும் எப்படி ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கலாம்.

மோடி பிரச்சாரத்திற்கு வந்துவிட்டு ஆலோசனைக் கூட்டம் என நாடகமாடுகிறார். எனவே அவருடன் எனக்கு பேச ஒன்றும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version