Home நிகழ்வுகள் தமிழகம் 5 பெண்கள் விடிய விடிய பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் புதைத்த பொள்ளாச்சி கும்பல்

5 பெண்கள் விடிய விடிய பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் புதைத்த பொள்ளாச்சி கும்பல்

0
5 பெண்கள்

5 பெண்கள் விடிய விடிய பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் புதைத்த பொள்ளாச்சி கும்பல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து சி.பி.ஐ. கைக்கு இந்த வழக்கு மாறியுள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு விஷயமும் புதகராமாகக் கிளம்பிக் கொண்டே உள்ளது.

பொள்ளாச்சி கும்பல் துணை சபாநாயகர் மகன் உட்பட ஒரு பெரிய நெட்வொர்க்கே இயங்கிக் கொண்டு இருப்பதை மீண்டும் நக்கீரன் ஆதாரத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டது.

PAID என பைக்கில் ஸ்டிக்கர் ஓட்டிக்கொண்டு இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி, கோவைப் பகுதியில் வலம் வந்துள்ளனர்.

தற்பொழுது ஒரு பெண் இந்தக் கும்பலைப் பற்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும் இன்னும் அவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

அப்பெண் ஆடியோவில் கூறியதாவது, என்னைப் போன்று பல பெண்களை இந்தக் கும்பல் சீரழித்துள்ளது.

ஒரு நாள் இவர்கள் விரித்த வலையில் நான் உட்பட 4 பேர் பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிக்கிக்கொண்டோம்.

அப்போது எட்டு பேர் கொண்ட கும்பல் எங்களைச் சீரழித்தனர். அப்போது மேலும் ஒரு சிறு வயதுப் பெண்ணைக் கூட்டி வந்தனர்.

அப்பெண்ணை விடிய விடிய கற்பழித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் மரணம் அடைந்துவிட்டார்.

உடனே அந்தப் பெண்ணின் சடலத்தை பண்ணை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர். எங்களை வீடியோ எடுத்துக்கொண்டு வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டினர் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல பெண்கள் புகார் கொடுக்க முன்வரலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version