Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனாவால் பாதிப்படைந்த தலைமை காவலர் மரணம் : விருதுநகர்

கொரோனாவால் பாதிப்படைந்த தலைமை காவலர் மரணம் : விருதுநகர்

தலைமை காவலர்

மதுரை: கொரோனாவால் பாதிப்படைந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார்.

தென்மாவட்டங்களில் கொரோனாவால் இறந்த முதல் காவலர்

தென்மாவட்டங்களில் கொரோனாவால் இறந்த முதல் காவல் அதிகாரியாக இவர் கருதப்படுகிறார்.

கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இராஜபாளயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு மற்றப்பட்டார்.

பின்னர், மீண்டும் இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மரணம்

இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 3ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து இவர் பணிபுரிந்த காவல் நிலையம் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version