Home Latest News Tamil தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை தெரிவிக்கையில் “தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்”, என தெரிவித்தார்.

கடவுளுக்கு தான் தெரியும்

“நாங்கள் வைரஸ்ஸை தடுப்பதிலும் மற்றும் மக்களை காப்பாற்றுவதிலும் ஈடுபட்டுள்ளோம். இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மருத்துவ நிபுணர்கள் கூறுவதை நாங்கள் அமல் படுத்தி வருகிறோம். இந்த வைரஸ் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை மற்றும் தமிழகத்தில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்,” என பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்

கொரோனா வைரஸ்ஸை ஒழிப்பதில் எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என முதலமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.

சென்னையை விட்டு மக்கள் கண்டிப்பாக வெளியேரக்கூடாது

“சென்னையை விட்டு மக்கள் கண்டிப்பாக வெளியேரக்கூடாது,” என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version