Home நிகழ்வுகள் தமிழகம் திறக்கப்படும் பள்ளிகள் – தமிழக அரசு அதிரடி

திறக்கப்படும் பள்ளிகள் – தமிழக அரசு அதிரடி

0

திறக்கப்படும் பள்ளிகள் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல் 12 தேதி வரை கொரோன வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

கொரோன வைரஸ்:

உலகையே உலுக்கிய கொரோன வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் முற்றிலும் முடங்கியுள்ளது ,இதன் காரணமாக கல்வி கற்கும் மாணவர்கள் தற்பொழுது இணைய தளங்களின் மூலம் கற்று வருகின்றனர் .

பத்தாம் வகுப்பு பொது தேர்வு:

இந்நிலையில் தமிழகத்தில் முக்கியத்துவம் குறைந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று பெரு வாரியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தார் .

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு:

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட  பொது தேர்வுகள் வரும் ஜூன் 1  தேதி முதல் 12  தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது  மற்றும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு பொது தேர்வும் ஜூன் 4 தேதி நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்வு சுமை:

இதன்காரணமாக ஊரடங்கு காரணமாக கொண்டாட்டத்தில் இருந்த மாணவர்கள் தற்போது தேர்வு சுமை தோன்றி கொண்டுள்ளது

மேலும் பொது தேர்வுகள் மிகவும் திட்டமிடப்பட்டு சுகாதாரமான முறையில் உரிய தனிமனித இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிகள் திறப்பு:

எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version