Home நிகழ்வுகள் தமிழகம் ஈரோடு: பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் விபத்தில் பலி

ஈரோடு: பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் விபத்தில் பலி

பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர்

ஈரோடு: இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் மீது சரக்கு லாரி ஏரியதால் பலி.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

இறந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை சேர்ந்த கே. கந்தசாமி, 37, அவரது மனைவி தங்கமணி, 33, மற்றும் அவரது மகன் பிரனேஷ் என தெரியவந்துள்ளது.

கந்தசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் ஈரோடு நோக்கி பயணம் செய்ததாக தெரிகிறது. 46 புதூர் என்னும் இடத்தை நெருங்கிய பொழுது எதிரில் காங்கேயத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு லாரி மோதியது.

சம்பவ இடத்திலேயே பலி

“இந்த நிகழ்வில் மூவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்,” என காவல் நிலைய ஆய்வாளர் ஆர். மணிகண்டன் தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே மூவரும் இறந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஈரோடு வட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர் பி. குமார்,47 கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version