Home Latest News Tamil சக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?

சக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?

0
சக்தியின் கற்பழிப்பும்

சக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலைக்குபின், அனைவருக்கும் பரிட்சியமானவராக மாறினார் கௌசல்யா. கணவரின் கொலைக்குக் காரணமான, பெற்றோர்களைத் தூக்குமேடை ஏற்றினார்..

கொலைக்குக் கொலையே தீர்வாகாது எனினும் இதுபோன்ற தீர்ப்பு, வருங்காலத்தில் ஆணவக்கொலைகளைக் கட்டுப்படுத்தும் என பாராட்டப்பட்டது.

அதன்பின், அறக்கட்டளை பெண்ணியம் என தன்னுடைய பாதையை சமூக சீர்திருத்த பாதையாக மாற்றிக்கொண்டார் கௌசல்யா.

அப்பாதையில் சென்ற கௌசல்யா, சக்தி என்ற காமுகனின் வலையில் வீழ்ந்தார்.

சக்தி ஏமாற்றிய பெண்கள்

நிமிர் கலையகத்தில், கலை பயிலவரும் பெண்களை மடக்குவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார் சக்தி. அதன் தலைமை ஆசானே இவர் தான்.

நிமிர் கலையகத்தில் இருக்கும் பலபெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதில் ஒரு பெண்ணை கருவுறவைத்து கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார்.

வெளிநாட்டுப்பெண்ணை, ஸ்கைப் வீடியோகால் மூலம் காதல் வலையில் விழவைத்துள்ளார். பல திருநங்கைகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

கௌசல்யாவின் காதல் மயக்கம்

கௌசல்யாவும், சக்தியின் வலையில் வீழ்ந்தார். இதைத் தெரிந்துகொண்ட திருநங்கை ஒருவர், சக்தியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை கௌசல்யாவிற்கு அனுப்பியுள்ளார்.

சக்தியின் அனைத்து லீலைகளையும் தெரிந்துகொண்ட பின்பு… கௌசல்யா, திருங்கையிடம் சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

பதிவுத் திருமணம்

நான் ஏற்கனவே சக்தியைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டேன். எனவே, இந்த வீடியோவை யாரிடமும் காட்டவேண்டாம், இவ்விசயத்தையும் யாரிடமும் சொல்லவேண்டாம் எனக்கூறியுள்ளார்.

ஆனால், கௌசல்யா பதிவுத்திருமணம் செய்துகொண்டதாகக் கூறியது பொய். சக்தியைக் காப்பாற்றவே அப்படி கூறியுள்ளார்.

இரண்டாவது முறையும் காதலித்தவரை கரம்பிடிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்.

கௌசல்யாவின் தவறான முடிவால், காமுகன் கையில் சிக்கியதுடன் அவப்பெயரையும் வாங்கிக்கொண்டார்.

சக்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை

இத்தனை பெண்களை கற்பழித்த நபருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை “மைனர் குஞ்சு” காமெடியை நினைவு படுத்துகிறது.

இயக்கத்தைவிட்டு வெளியேற வேண்டுமாம். மூன்று மாதம் பறை இசைக்கக் கூடாதாம். மூன்று லட்சம் அபராதமாம்.

இந்தத் தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால், மூன்று மாதம் கழித்து மேல்முறையீடு செய்துகொள்ளலாமாம்.

இதற்குப் பெயர் தீர்ப்பா?

ஆணவப்படுகொலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்த கௌசல்யா, வேறுஒருவரை மீண்டும் மணக்கிறார். அதில் தவறில்லை.

ஆனால், அவன் ஒரு காமுகன் எனத்தெரிந்தும் அவன் செய்த தவறுகளை மறைத்தும் திருமணம் செய்துகொண்டுள்ளார்..

இவர் எப்படி சமூக சீர்திருத்தவாதியாவார்?

கௌசல்யா எடுத்த தவறான முடிவுகளால் சங்கர் இறந்தார். அடுத்து அவருடைய பெற்றோர்கள் இறந்தனர்.

தற்பொழுது, அவரே அவரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு காமுகனிடம் சிக்கியுள்ளார்.

பெற்றோருக்கு ஒரு நியாயம்? சக்திக்கு ஒரு நியாயமா?

நியமாகப் பார்த்தால், சங்கர் செய்த காரியங்களுக்கு அவரை வெறுத்து ஒதிக்கி இருக்கவேண்டும். இல்லையேல், நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கவேண்டும்.

கணவனைக் கொன்றவர்கள் எனப் பெற்றோரையே தூக்குமேடையில் ஏற்றியவர், சக்தியின் வீடியோவை மறைத்துவிடச் சொன்னதின் காரணம் என்ன?

இது தான் பகுத்தறிவோ?

இந்த சம்பவங்கள் அனைத்துமே, கௌசல்யா ஒரு சுயமுடிவு எடுக்கத் தெரியாத பெண் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அவரை இயக்கியவர்களே, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனரா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

காரணம், அன்று திருநங்கை விசயத்தை முகநூலில் அம்பலப்படுத்திய நபரை ஆர்.எஸ்.எஸ். என முத்திரை குத்தினர்.

இன்று அவர்களே, சக்தி தவறு செய்தது உண்மை எனக் குற்றத்தை உறுதிசெய்து தண்டனையும் வழங்கியுள்ளனர்.

இவர்கள் இயக்கத்தில், முன்பணம் செலுத்திவிட்டு “மைனர் குஞ்சு” பாணியில் ரேப் செய்து கொள்ளலாமா?

சாதியை ஒழிக்க நினைக்காமல், அதைவைத்து அரசியல் செய்பவர்களின் கையில் சிக்கினால் என்ன ஆவார்கள்? என்பதற்கு கெளசல்யாவே ஒரு உதாரணம்…

எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய கிளிக்செய்யவும் join

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version