Home நிகழ்வுகள் தமிழகம் சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இருவர் பலி

சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இருவர் பலி

சென்னை: சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வண்டி, நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதிய விபத்தில் இருவர் பலி ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதி.

விபத்தில் சிக்கியவர்கள் திருவள்ளூரில் வசித்துவந்தவர்கள்

விபத்தில் இறந்தவர்கள் மாசிலாமணி, 30 மற்றும் அரூண் குமார், 25 என தெரியவந்தது. காயங்களுடன் தப்பிய ஆனந்த், 32 செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் திருவள்ளூரில் வசித்துவந்தவர்கள் என காவல் துறை தெரிவித்தது.

சாலை ஓரம் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த சரக்கு வண்டி ஓட்டுநர்

நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்துள்ளது. “ஆதிக மழை பெய்ததன் காரணமாக ஓட்டுநர் வண்டியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த வந்த சிறிய ரக சரக்கு வண்டி, நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியின் பின் பகுதியில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமுற்றார்,” என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

அச்சரப்பாக்கம் காவல் துறை வழக்கு விசாரணை செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version