உலகில் உள்ள டாப் 5 மர்ம கோவில்கள் பற்றி கூறவும்

0
Questions & Answersஉலகில் உள்ள டாப் 5 மர்ம கோவில்கள் பற்றி கூறவும்
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagil ulla top 5 marma kovilkal patri kooravum

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago

1.தஞ்சை பெரிய கோவில் 
 இது1007ஆம் ஆண்டுகளில் ராஜ ராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்திய கட்டடக்கலைக்க பெயர் பெற்ற கோவில் என்பதோடு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்துமே சுத்தமான கிரானைட் கற்களாகும். கோவில் விமானமும் 80 டன் எடையுள்ள ஒரே கிரானைட் கல்லால் ஆனது.இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த கோவிலைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 60 கி.மீக்கு எந்த மலையோ அல்லது குன்றுகளோ கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி முழுக்க பெரிய பெரிய கிரானைட் கற்களைக் கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள்  இன்று வரையிலும் அதற்கான மர்மம் விலகவில்லை. 
2.குஜராத் கடல் கோவில் 
அடுத்ததாக வருவது குஜராத் மாநிலத்தில் பரூச் மாவட்டத்தில் கவி-கம்போய் என்ற சிற்றூரில் அரபிக்கடலில் கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் கோவில். இதற்கு தினமும் மறையும் கோவில் என்றும் பெயருண்டு. இப்படி ஒரு கோவில் இருப்பதே 150 ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வோங்கும்போது தான் இக்கோவில் இருப்பது தெரியவந்தது. இந்தக் கோவிலின் அதிசயம் என்னவென்றால், காலை வேளைகளில் முழுமையாக காட்சியளிக்கும். பின்பு மாலை முதல் இரவு வரையிலும் கடல் அலைகளால் கோவில் முழுவதுமாக மூழ்கடிக்கப்படும். அந்த அளவுக்கு கணகச்சிதமாக இந்த கோவிலை கட்டி முடித்துள்ளனர். இதை கட்டியது யார், எந்த ஆண்டு என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது. 
3.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 
 கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலைப் பற்றிய மர்மமும் இன்று வரை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 ரகசிய நிலவறைகள் திறந்து பார்க்கப்பட்டன. திறந்து பார்த்த உடனேயே அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றுவிட்டனர். அந்த அறைகளில் இருந்தவை அனைத்துமே தங்க வைர, வைடூரிய ஆபரணங்கள் தான். அவற்றின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். கடைசியாக உள்ள 7ஆவது அறை மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.
பொக்கிஷ குவியல்
அந்த அறை முழுவதும் கடினமான எக்கு இரும்பால் செய்யப்பட்டுள்ளது. அந்த கதவில் என்ன தான் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தாலும் கூட சிறு துளையைக் கூட காண முடியவில்லை. இந்த நிலவறையில் உள்ள சொத்துக்கள், இது வரை கண்டெடுக்கப்பட்ட சொத்து மதிப்பை காட்டிலும் 4 மடங்கு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த அறையின் கதவை ரகசிய மந்திரத்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்பினரோ, இந்த அறையில் தான் உலகம் அழியும் நாள் பற்றிய ரகசிய குறிப்பு உள்ளது என்றும் நம்புகின்றனர். இதனாலேயே இந்த கோவிலைப் பற்றிய மர்மம் இன்றும் தொடர்கிறது.
 
4.ஆந்திரா லேபாஷி கோவில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ளது லேபாக்ஷி கோவில். சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திரர் ஆகிய மூவருக்கும் ஒரே கோவிலாக அமைந்துள்ளது. இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் அமைக்கப்பட்டுள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மர்மமும் விழகாமலேயே இருந்து வருகிறது. 5.காடு மல்லேஸ்வரா கோவில் 
கடைசியாக நாம் காண்பது, கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் வடமேற்கு பகுதியில் அமைந்ததுள்ள காடு மல்லேஸ்வரர் கோவில். இந்த கோவில் இருப்பதே 1997ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவில் இருந்த நிலத்திற்கு அருகில் கட்டுமானத்திற்கு குழி தோண்டும்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. முழுவதுமாக தோண்டிய போது தான், பெரிய அளவிலான கோபுரத்தோடு, குளத்துடன் கூடிய கோவில் இருப்பது தெரிய வந்தது.
சிவனுக்கு நந்தி அபிஷேகம்
இந்த கோவிலில் நந்தியானது வழக்கமாக இருப்பதைப் போல் இல்லாமல், சிவலிங்கத்திற்கு முன்புறம் இல்லாமல், லிங்கத்திற்கு முன்புறம் சற்று மேற்புறத்தில் அமைந்துள்ளது. அதோடு, நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கிறது. அந்த நீரானது நேராக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அமைந்துள்ளது. இந்த அதிசய காட்சியை பார்க்கவே தினந்தோறும் பக்தர்கள் படையெடுக்கின்றனர். லிங்கத்தின் மீது விழும் நீர் நேராக குளத்தில் சென்று கலக்கிறது. ஆனால் நந்தியின் வாயிலிருந்து விழும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.