Home நிகழ்வுகள் தமிழகம் சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?

சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?

301
0

சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?

காய்ச்சல் காரணமாக சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயதான இளம் பெண் மரணம் அடைந்துள்ளார் , இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

வீட்டு சிறை:

உலகமே  கொரோன வைரஸ் காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டுள்ளது , மேற்கத்திய நாடுகள் கடுமையான உயிரிழப்பை சந்தித்து  வருகின்றன .

இந்தியாவில் தொடக்கத்தில் சில ஆயிரங்களில் இருந்த நோய் தோற்று தற்பொழுது ஒரு லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ,பலி எண்ணிக்கை 3000 கடந்து சென்று கொண்டிருக்கிறது .

சென்னை போராட்டம்:

குறிப்பாக தமிழக்தில் சென்னை மிகவும் கவலைக்குரிய நிலையில் கொரோனவை எதிர்த்து போராடி வருகிறது .

ஆரம்பத்தில் மிக குறைவாக இருந்த எண்ணிக்கை சமீப நாட்களில் 500 க்கு குறைவதில்லை என்பதை வைத்து சென்னையின் நிலைமையை அறியலாம்.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 510  கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

இளம் பெண் பலி:

இந்நிலையில்தான் இன்று   ராயபுரம் அரசு மருத்துவ மனையில் கொரோன நோய் தொற்று பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் திடீரென்று  உயிரிழந்துள்ளார் .

அப்பெண் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் என்றும் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சலும் ,கடுமையான சளியும் இருந்துள்ளது .

 

சோதனை முடிவுகள்:

இதன் காரணமாக நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் இறந்துள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் கொரோன வைரஸ் காரணமாக பலி ஆகியிருக்க கூடும்  என்பது  சோதனை முடிவுகள் வந்தே பிறகே தெரியவரும்.

Previous articleஇயக்குநரான நடிகை கனிகா: அன்னையர் தினத்தில் மா குறும்படம் வெளியீடு!
Next articleராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் எப்போது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here