Manisha Yadav Hairstylist; லாக்டவுனால் இந்த நிலைக்கு வந்த நடிகை மனீஷா யாதவ்: வைரலாகும் புகைப்படம்! கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை மனீஷா யாதன் தனது காதல் கணவருக்கு முடிவெட்டி அழகு பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த நடிகை மனீஷா யாதவ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனீஷா யாதவ்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 -2, ஒரு குப்பை கதை, சண்டிமுனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது உலகையே அச்சுறுத்திய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மீண்டும், 17 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, ஓவியம் வரைவது, ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை மனீஷா யாதவ் தனது காதல் கணவருக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வர்நீத் என்பவரை 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது குடும்ப பெண்ணாக மாறிய மனீஷா யாதவ் தனது கணவருக்கு முடி வெட்டி ஹேர் ஸ்டைலிஷ்டாக மாறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.