Rashmika Mandanna; தூங்கி கொண்டிருந்த ராஷ்மிகாவை தட்டி எழுப்பிய செல்லக்குட்டி நாய்! தூங்கிக்கொண்டிருந்த ராஷ்மிகாவை அவர் வளர்த்து வரும் நாய் தட்டி எழுப்பியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவை அவரது வளர்ப்பு நாய் தட்டி எழுப்பியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒட்டு மொத்த மக்களுமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.
சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
உடற்பயிற்சி செய்வது, சமையல், வீட்டு வேலைகள், யோகா, தோட்ட வேலை, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர். ஒரு சிலர் தங்களது செல்ல பிராணிகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தூங்கிக் கொண்டிருந்த போது அவர் வளர்த்து வரும் செல்லநாய் ஒன்று அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுகிறது.
அதோடு, அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு முத்தம் கொடுப்பது போன்று செய்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ராஷ்மிகாவும் செல்லநாயும் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.