Home நிகழ்வுகள் தமிழகம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

335
0

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோன வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 1 தேதி முதல் 12  தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாட்டை தமிழக அரசு முழு வீச்சுடன் எடுத்து வருகிறது .

பொதுநல மனு:

தமிழகத்தில் தற்போது கொரோன வேகம் அதிகரித்து வரும் வேளையில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார் .

மனு தள்ளுபடி:

அந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை ஏற்பதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்று கூறி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளனர் .

மேலும் தேர்வுகள் குறித்து சம்பந்தபட்ட தரப்பினர் யாரும் நீதிமன்றத்தை அணுகாத நிலையில் மனுதாரர் ஏன் வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் வினவினர்.

 மனு வாபஸ்:

இதனைடுத்து மனுதாரர் வழக்கினை வாபஸ் பெற அனுமதி  கோரியதை அடுத்து அதற்கு அனுமதி அளித்து மனுவினை தள்ளுபடி செய்துள்ளனர் .

தடை இல்லை:

எனவே தமிழக்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

எனினும் தேர்வுக்கு இன்னும் வெகு நாட்கள் உள்ளதால் இதற்கிடையில் வேற ஏதும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here