Home நிகழ்வுகள் உலகம் கொரோனா வைரஸ்: உச்சகட்ட அலர்ட்டில் அமெரிக்கா

கொரோனா வைரஸ்: உச்சகட்ட அலர்ட்டில் அமெரிக்கா

628
0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

நேற்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவ் லிஜி யான் அமெரிக்கா இராணுவம் தான் சீனாவில் வைரஸ் பரப்பி இருக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சீனாவுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என காட்டமாக சீன ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

கொரோனாவை அமெரிக்கா எப்படி எதிர்கொள்கிறது?

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 1500 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை அங்கு எந்த ஒரு மரணமும் நிகழவில்லை.

வீட்டில் இருந்து வேலை

அமெரிக்க அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். வெள்ளை மாளிகை ஊழியர்கள் கூட வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலா பயணிக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் விசாக்களையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளையும் அமெரிக்க அரசு மூடச்சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு சலுகை

பெருநிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. கூகுள், பேஸ்புக், அமேசான் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அந்தந்த நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளது.

இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் அச்சமடைவது தவிர்க்கப்படும் என அமெரிக்க அரசு நம்புகிறது.

Previous articleஇந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய கொல்கத்தா ஈடன் கார்டன்
Next articleவிஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா – கொந்தளித்த மிஷ்கின்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here