Home சிறப்பு கட்டுரை பெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!

பெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!

1482
0

பெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!

வாசனை திரவியத்தை (fragrance) அடித்துக்கொண்டால் பெண்களை மயக்கலாம். எந்த ஒரு வாசனை திரவிய நிறுவனமும் இந்த முறையில் விளம்பரம் செய்யத் தவறுவதில்லை.

Axe perfume, Fogg perfume, Kenzo perfume இப்படி நிறைய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.

எங்களுடைய வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் சுற்றி சுற்றி வருவார்கள். வாசனையை நுகர்ந்தவுடன் மடியில் சாய்வார்கள் என்றெல்லாம் விளம்பர படுத்தியுள்ளனர்.

இந்த வாசனை திரவியம் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்களா? என்ற கேள்வி 50-50 என்று சொல்லலாம். சிலருக்கு வாசனை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம்.

இந்த வாசனை திரவியம், பட்டனை அழுத்தியதும் எப்படி பாட்டிலில் இருந்து பீறிட்டு வெளியே வருகின்றது என்பதை பற்றிய பதிவு தான் இது.

இதை அறிந்துகொள்ளாமல் பலர் ஒரு மதிப்பெண்ணில், அரசு வேலையை இழந்துள்ளனர். அதுபற்றி தெரியுமா?

வாசனை திரவிய பாட்டில்கள் அனைத்தும், பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றது.

பெர்னோலி தத்துவம்

பாய்மவேகம் உயரும்பொழுது, அந்த பாய்மத்தின் அழுத்தம் அல்லது நிலையாற்றலும் அதே வேளையில் குறையும்.

பள்ளிபருவத்தில் இந்த தத்துவத்தை நீங்கள் படித்து இருப்பீர்கள், ஆனால் அது எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு முறையாக கற்றுத்தரப்படவில்லை.

படத்தில் உள்ளவாறு தான் வாசனை திரவிய பாட்டில் அமைப்பு இருக்கும். வாசனை திரவியம் முக்கால் பங்கு நிரப்பப்பட்டு இருக்கும். மீதி உள்ள பகுதியில், காற்று அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்டு இருக்கும்.

மேலே உள்ள மூடியை அழுத்தியவுடன் பெர்னோலி தத்துவம் மூலம் வாசனை திரவியம் வெளியேறும்.

பாட்டிலின் வெளியே காற்று சமநிலையில் இருக்கும். அதாவது பாட்டில் உள்ள அழுத்தத்தை விட வெளியில் உள்ள காற்றின் அழுத்தம் மிகவும் குறைவு.

மூடியை அழுத்தியதும், பாட்டில் உள்ள காற்று அழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெளியேற நினைக்கும்.

வாசனை திரவியம், பாட்டிலினுள் இருக்கும் காற்றுக்கும், வால்வின் ஓட்டைக்கும் இடையில் இருக்கும். இதனால், காற்று கொடுக்கும் அழுத்தத்தின் மூலம், முதலில் வாசனை திரவியம் வெளியேறும்.

ஓவ்வொரு முறையும் பட்டனை அழுத்தும் போதும், வாசனை திரவியம் இப்படித்தான் வெளியே வரும். வாசனை திரவியம் முழுமையாக தீர்ந்தவுடன் தான் இறுதியாக காற்று மட்டும் புஸ் புஸ் என்று வெளியில் வரும்.

அல்லது, காற்றும் வாசனை திரவியத்துடன் சேர்ந்தே வரும். காற்று தீரும்போது வாசனை திரவியமும் தீர்ந்துவிடும்.

நாமும் வாசனை திரவியம் தீர்ந்தவுடன் பாட்டிலை வீசி விடுவோம்.

காற்று, அழுத்தம் அதிகமான பகுதியில் இருந்து, அழுத்தம் குறைவான பகுதியை நோக்கி செல்லும். இதுவே பெர்னோலி தத்துவம்.

இந்த அடிப்படையில் தான் கேஸ் சிலிண்டரும் இயங்குகின்றது. அதிக அழுத்தத்தின் மூலம் அடைக்கப்பட்டு இருப்பதால், வால்வு லேசாக விலகினாலும் பீறிட்டு வெளியேறும்.

இப்பொழுது பெர்னோலி சமன்பாடு பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறன்.

இது பள்ளி தேர்வில் மட்டுமல்ல, TNPSC தேர்வுகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி.

எனவே, பெர்னோலி என்றவுடன் செண்ட் பாட்டிலை நினைத்துக்கொண்டால் போதும் எளிதில் விடை அளித்துவிடலாம்.

Previous article2.0 டெல்டா மக்களின் துயர் துடைக்கும் படம்!
Next articleஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here