Home வரலாறு பங்களாதேஷின் புலிக்குட்டி ஷகிப் அல் ஹசன் பிறந்தநாள் இன்று

பங்களாதேஷின் புலிக்குட்டி ஷகிப் அல் ஹசன் பிறந்தநாள் இன்று

286
0

90களில் பிறந்தவர்களுக்கு வங்கதேச அணி கத்துக்குட்டி என்று நினைத்தார்கள்.

அதில் வங்கதேசத்தின் பல முக்கிய வீரராக திகழ்ந்தவர்கள் அஸ்ரபுல், முஷ்பிக்குர் ரஹிம், அபிபுள் பஷர், மோர்தசா போன்று அந்த காலகட்டத்தில், புலியாக வந்தவர் ஷகிப் அல் ஹசன்.

வங்கதேச நாட்டில் மகுரா மாவட்டத்தில் மார்ச் 24ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஷகிப் அல் ஹசன்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், 9 மாதங்கள் கழித்து அடுத்த வருடம் 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

வங்கதேசத்தில் நல்ல பேட்ஸ்மேன், நல்ல பவுலர்கள் இருந்தாலும் ஒரு அணியாக சிறந்து விளங்கவில்லை.

ஷகிப் அல் ஹசன் அணிக்குள் வரும்போது ஆல்-ரவுண்டராக வலம்வந்தார். தற்போதுவரை ஆல்ரவுண்டர் இல் நம்பர்-1 இடத்தை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கிறார்.

56 டெஸ்ட் போட்டி, 206 ஒருநாள் போட்டி, 76 டி20 போட்டிகளில் விளையாடியவர் 11752 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்கள், ஒருநாள் போட்டியில் 134 ரன்கள், டி20 போட்டியில் 84 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் சர்வதேச போட்டிகள் 14 சதங்களும் 71 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

பந்து வீச்சிலும் இவர் சளைத்தவர் இல்லை என்பதற்கு 562 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் 18 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், ஒருநாள் போட்டியில் இரண்டு தடவைக்கு மேல் 5 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

இவர் இல்லாமல் வங்கதேசம் அணி விளையாடும் போது சற்று திணறி விடுவார்கள் என்றே கூறலாம்.

இந்தியா ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக பல போட்டிகளில் வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

வங்கதேசத்தில் இவர் ஒரு மிகப் பெரிய ஜாம்பவனாக வலம் வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

இவருக்கு வங்கதேச மட்டுமில்லாமல் உலகங்களும் அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கேப்டனாகவும் பல போட்டிகளில் வங்கதேசத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

இவர் அதிவேகமாக ஒரு ஆல்-ரவுண்டராக 10 ஆயிரம் ரன்களையும் 500 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிக்கு எதிராகவும் 5 விக்கெட்டை வீழ்த்திய நாலாவது பந்துவீச்சாளர் ஆவார். (டேல் ஸ்டெயின், முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத்)

ஒரு ஆல்-ரவுண்டராக அனைத்து வகை போட்டியிலும் முதல் இடத்தில் இருந்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

சர்வதேச போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் அவர்.

ஒரு கேப்டனாக டி20 போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே சர்வதேச வீரர் இவர் மட்டுமே.

இவர் தற்போது ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்திலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறார்.

ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் அதிக ரன் மற்றும் அதிக விக்கெட் எடுத்த பங்களாதேஷ் வீரர் ஆவார்.

ஒரு உலக கோப்பை தொடரில் 600 ரன்கள் மற்றும் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார்.

29ஆம் தேதி அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு ஐசிசி இவரை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஓராண்டு விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

இவர் என்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

Previous articleகொரோனாவால் பைத்தியமான இளைஞர் – வீடியோவால் பரபரப்பு
Next articleHantavirus; கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய ஹண்டா வைரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here