Home விளையாட்டு ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ ஆறுதல்

ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ ஆறுதல்

247
0
ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ

ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ ஆறுதல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஏழாவது உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

லீக் போட்டிகளில் தோற்காத இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் மழை காரணமாக பள்ளி போட்டியில் முதலிடம் பிடித்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவில் டிஎல் முறைப்படி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுலபமாக வென்றது. இந்திய அணி பந்து வீச்சு அந்தப் போட்டியில் பலமாகவே இருந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய அணி இந்த விதத்திலும் வலுவாகவே விளையாடவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கோட்டை விட்டது.

முதல் ஓவரின் 3-வது பந்தில் அலிசா ஹீலி தூக்கி அடித்த பந்தை ஷாபாலி வர்மா கேட்சை தவறவிட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அலிசா ஹீலி 39 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.

லீக் போட்டிகளில் அற்புதமாக விளையாடிய ஷாபாலி வர்மா இறுதிப் போட்டியில் முதல் ஓவரில் மூன்றாவது வயதிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணி தோல்வி அடையும்போது ஷாபாலி வர்மா கண்ணீர் விட்டு அழுதது, பார்க்கும் அனைவரின் கண்ணில் நீர் வர வைத்தது.

அவருக்கு ஆறுதலாக நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரெட் லீ “இறுதிப்போட்டியில் ஷாபாலியை நான் உணர்ந்தேன், அவரைப் பார்க்கவே கடினமாக இருந்தது.

அவர் ஆஸ்திரேலியாவில் விளையாண்ட விதம் குறித்து அவர் பெருமை படவேண்டும், அவர் இங்குள்ள மைதானங்களில் எதிர் அணியை எதிர்கொண்டது திறமை மற்றும் மன வலிமைக்கு சான்றாகும்.

இவர் இங்கிருந்து சிறப்பாக முன்னேற போகிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவே குறிப்பிட்டுள்ளது. இந்த அனுபவத்தில் இருந்து மீண்டும் ஷாபாலி வர்மா வலுவாக வருவார்.

இது போன்ற தருணங்களில் அவரை நேர்மையானவராக வரையருக்கக்கூடும், மீண்டும் ஷாபாலி ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அதிக ரன்களைக் குவித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்” என்று பேசியுள்ளார்.

Previous articleதமிழனை சீண்டிய ஹர்பஜன் சிங்
Next articleஎனக்கு பிடித்த இந்திய கிளாஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – பிரைன் லாரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here