Home சினிமா கோலிவுட் விளக்கு வைப்போம்… அப்பவே சொன்னது: நீங்கள் என்ன புதுசா? கஸ்தூரி கிண்டல்!

விளக்கு வைப்போம்… அப்பவே சொன்னது: நீங்கள் என்ன புதுசா? கஸ்தூரி கிண்டல்!

665
0
Kasthuri Reply To PM Modi

விளக்கு வைப்போம்… அப்போவே சொன்னதுதான்: நீங்கள் என்ன புதுசா? கஸ்தூரி கிண்டல்! பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் எல்லாம் அப்பவே சொன்னது விளக்கு வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் விளக்கு வைப்போம் என்று வீடியோ பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி பிரதமர் மோடியை கிண்டலடித்து டுவிட்டரில் விளக்கு வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் ஊரடங்கை பின்பற்றி நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்த நாடுகளுக்கு இந்தியாவின் ஊரடங்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.

மேலும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, டார்ச்லைட், செல்போன் லைட் மூலமாக 9 நிமிடங்கள் ஒளியேற்றுங்கள். அப்போது நாட்டு மக்களைப் பற்றி யோசியுங்கள் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கஸ்தூரி கிண்டல் டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், நாங்கல்லாம் அப்பவே சொன்னது… விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் அத்துடன் இணைத்திருந்தார்.

அந்த வீடியோ அவரது நடிப்பில் வந்த ஆத்மா படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம். குலம் விளங்க விளக்கு வைப்போம் என்ற அந்த பாடல் தான்.

தொடர்ந்து நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பிஸியாகவே இருக்கிறார். தற்போது மோடியை கிண்டலடிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டருக்கு பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

ஒரு சிலர் ஆரியத்தின் பரம்பரை தொழிலே அதுதான். இவ்வளவு ஏன், சதா, ரித்திகா நடிப்பில் வந்த படத்தின் டைட்டில் கூட டார்ச்லைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இது போன்று செல்போன் மூலம் ஒளி எழுப்புவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தை மீண்டும் நினைவு கூர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here