அஜித்: கொரோனா வைரஸ் உலக அளவில் பல்வேறு மக்களை பாதித்து கொன்று குவித்து வருகிறது. உலக அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.
கொரோனா பாதித்தவர்களுக்கு திரை உலகில் இருந்து பல்வேறு நடிகர், நடிகையர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.