Home சினிமா கோலிவுட் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

261
0
Rajinikanth

Rajinikanth; ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரஜினி பேசியதாக கராத்தே தியாகராஜன் தகவல்! சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினரை ரஜினிகாந்த் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ் குடும்பத்தினரை ரஜினிகாந்த் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனாவல் பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் சேவைகளை மட்டும் இயக்க தொடர்வண்டி துறை முடிவு
Next articleமரகதவள்ளி என்ற மேகி: 18 வருடங்கள் ஆன கமலின் பஞ்சதந்திரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here