நடிகை ராசி கண்ணா சூர்யா-ஹரி கூட்டணியில் புதியதாக உருவாக உள்ள அருவா படத்தில் நடிக்க உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் நடிகை ராசி கண்ணா, உங்களின் அடுத்த படம் என்ன எனக் கேட்ட ஒரு ரசிகரின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.
அவர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் அரண்மனை 3 மற்றும் அருவா எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் அருவா படம் எனக் கூறாமல் சூர்யா-ஹரி கூட்டணி எனக் கூறியுள்ளார்.
சூர்யா-ஹரி கூட்டணியில் புதியதாக உருவாக உள்ள படம் அருவா எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் தலைப்பு வேறு ஒருவர் பதிவு செய்து உள்ளதாக சர்ச்சை வெளியானது.
மேலும் ராசிக்கண்ணாவும் அருவா எனக் கூறாமல் சூர்யா-ஹரி எனக் கூறியுள்ளார். எனவே இப்படத்தின் தலைப்பு மற்றப்பட வாய்ப்பு உள்ளது.
Aranmanai 3 and a film with Suriya sir under Hari sir’s direction in Tamil.. Will give more clarity about two projects in Telugu that are under discussions, once the lockdown is over ☺️ https://t.co/sSIESmG3FJ
— Raashi (@RaashiKhanna) May 3, 2020