கரோனா வைரஸ் காரணமாக சன் டிவி யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ரன் சீரியல் முடிவுக்கு வந்தது. இதை ரன் ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகையே உலுக்கி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 500 பேருக்கு மேல் உலகம் உலகம் முழுவதும் இறந்து வருகிறார்கள்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்டு அரசங்கள் திணறி வருகிறது இந்தியா.
முன்னெச்சரிக்கையாக இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே தங்கள் பணியை தொடரவேண்டும் மற்ற அனைத்து கொள்கைகளும் மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தினக்கூலி வருமானங்கள் சினிமா வட்டாரங்களில் குறைந்துள்ளது.
இதுவரை படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் செய்யப்பட்டிருந்த எபிசோடுகளை மட்டும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் தற்போது தங்களுடைய பழைய படங்கள் பழைய சீரியல் பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கிவிட்டன.
காரணம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களின் எபிசோடுகள் சூட்டிங் நடைபெறாததால் கைவசம் தொடர்களின் புதிதான எபிசோடுகள் இல்லை.
ரன் தொடர்
சன் டிவியில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கிய ரன் தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இதில் கிருஷ்ணா, சாயாசிங், அஸ்வந்த் திலக், நிழல்கள் ரவி சத்யபிரியா போன்றவர்கள் நடித்து வந்தார்கள்.
நேற்று மார்ச் 31ம் தேதி இந்த தொடரை பார்த்தவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள்.
மக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல அபிப்பிராயத்தை பெற்ற இந்த தொடர், விருவிருப்பு மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்து இருக்கும், கொஞ்சமும் சலிக்காமல் சென்றது இந்த தொடர்.
திடீரென்று நேற்று எபிசோடு முடிந்தவுடன் இறுதியில் நடிகர் கிருஷ்ணா திரையில் தோன்றினார்.
அடுத்து நடக்கப் போகும் சில காட்சிகளை சொல்லுயடி எதிரிகள் ஜெயிலுக்கு போனதாகவும் எல்லோருக்கும் உண்மை தெரிந்து, நடிகரும் நடிகையும் சேர்ந்து விட்டதாகவும் கூறி தொடரை நன்றி சொல்லி முடித்து வைத்தார்.
இதனால் இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பு ஆகாது என்று இது பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நாளை எபிசோடை கிருஷ்ணா நேற்றே சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தது மிகப்பெரிய ஏமாற்றமே.
ரசிகர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இந்த தொடர் தொடரும் என்று எதிர்பார்த்தார்கள்.
நேற்று நன்றி சொல்லி முடித்தவுடன் இந்த தொடர் தொடராது என்பது அர்த்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.