Home சினிமா கோலிவுட் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – சூர்யாவின் கண்டன அறிக்கை!

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – சூர்யாவின் கண்டன அறிக்கை!

280
0
Suriya Sathankulam Issue

Suriya; அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம்! சாத்தான்குளம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ளா சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மரக்கடையும், இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக போலீசாருக்கும், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மற்ற போலீசார் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் கண்டன அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது: அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Suriya Statement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here