Home சினிமா கோலிவுட் ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்!

ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்!

281
0
Tamannaah Salary Issue

Tamannaah Salary Issue; ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்! ஹீரோக்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம் தர வேண்டும் என்று நடிகை தமன்னா கேள்வி எழுப்பியதோடு, ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஹீரோக்களைப் போன்று ஹீரோயின்களும் கடின உழைப்பால் தான் முன்னேறுகிறார்கள் என்று நடிகை தமன்னா பேசியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

அதன் பிறகு அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வந்த பாகுபலி படம் தமன்னாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது.

கடந்தாண்டு விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா தனது அன்றாட வேலைகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிட்டு வருகிறார்.

ஆம், உடற்பயிற்சி செய்வது, யோகா ஆகியவற்றை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக சினிமா என்று எடுத்துக் கொண்டால் ஹீரோவுக்கு தான் அதிக மவுசு. அவருக்குப் பிறகு தான் ஹீரோயின்.

அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்கள், காமெடியன்கள், துணை நடிகர், நடிகைகள் என்று இருப்பார்கள்.

ஹீரோவை வைத்து தான் படமே எனும் போது அவருக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதுவும் மாஸ் ஹீரோ என்றால் சொல்லவே வேணாம். சம்பளம் ரூ.50 கோடி முதல் ரூ.100 வரை இருக்கும்.

அப்படியிருக்கும் போது ஏன் அவர்களுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் என்று நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இருக்காது. ஹீரோயின்களை மையப்படுத்திய எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறது.

அப்படியிருக்கும் போது, அவர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது போன்று அவர் பேசியுள்ளார்.

ஹீரோக்களைப் போன்று முன்னணி நடிகையாக வருவதற்கு ஒரு நடிகை ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது.

மேலும், அவர்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது திருமணமாகிவிட்டாலோ அவர்களது மார்க்கெட் அவ்வளவுதான்.

அதிகபட்சமாக ஒரு நடிகை ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரையில் தான் சம்பளம் வாங்குகிறார். ஆகையால், ஹீரோக்களைப் போன்று ஹீரோயின்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்தப் பேச்சு கோலிவுட் வட்டாரத்தை பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு மீசை இருப்பது போன்ற வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article22/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleஇப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here