Thala Ajith Birthday; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்! வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
தனது ரசிகர்களுக்கு அஜித் கனிவான வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.
அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
இதன் காரணமாக தற்போதே அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள தல ரசிகர்களே… அஜித் சாரின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரது பிறந்தநாளுக்கு எந்த common DP புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வைக்க வேண்டாம் என்றும், கொரோனா காலத்தின் போது எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டும் என்றும் அஜித் விரும்புவதாக வேண்டுகோள் வைத்தார்கள்.
இதையடுத்து, ஒரு நடிகனாக, மனிதனாக, ரசிகனாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இதை ரசிகர்களிடம் தெரியப்படுத்தலாமா என்று கேட்டதற்கு தயவு செய்து அவர்களிடம் கூறுங்கள் என்றார்.
அவரது வேண்டுகோளுக்கிணங்க இதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் அனைவருக்கும் நலமான வாழ்வு கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம். அஜித்தின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்போம். உங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.