Home வரலாறு பெண் கவிஞர் மீராபாய் மறைந்த தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 02

பெண் கவிஞர் மீராபாய் மறைந்த தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 02

514
0
பெண் கவிஞர் மீராபாய்
Mirabai (1498–1546/1547)

பெண் கவிஞர் மீராபாய் மறைந்த தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 02.  today what special day in world – india – tamil.

தன்னுடைய எழுத்து திறமையால் இந்தியா முழுவதும் பிரபலமான பெண் கவிஞர் மீராபாய் நம்மை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று மார்ச் 02.

மீராபாய் தன் எழுத்து பயணத்தில் 1300 பக்திப் பாடல்கள் வரை எழுதியுள்ளார். இவர் ஸ்ரீ குரு ரவிதாசின் சீடர் என்பது குறிப்பிடதக்கது. கடவுள் கிருஷ்ணா மீது மிகுந்த பக்தி கொண்டவர்.

மீராபாய் வாழ்க்கை வரலாறு (Mirabai Life History)

1498ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நகவுர் மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய 6 வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணா மீது அன்பு கொண்டு முழுநேரமும் அவரைப்பற்றியே பேசி கொண்டு இருப்பாரம்.

தன்னுடைய 16 வயதினிலே சித்தோர் மன்னன் போஜ் ராஜை மணமுடித்தார். ஆழும் மன்னரின் மனைவி என்பதால் நாடு முழுவது மதிப்பும் மரியாதையும் கிட்டி பிரபலமானார்.

மக்களுடன் அதிகமாக கலந்து உரையாடி பாடல், நடனம் என அனைத்து தரப்பு மக்களுடனும் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வந்தார்.

Mirabai Life History

திருமணமாகி இரண்டு வருடத்திலேயே தன் தந்தை, கணவர் இருவரையும் இழந்தார். தன் மாமனாரும் போரில் பெரிய காயம் பெற்று நடைபிணமாக கிடக்க நேரிட்டது.

இதனால் இவரை உடன் கட்டை ஏறும்படி அனைவரும் கூறியதால் அதை இருமுறை முயற்சி செய்தும் அவர் உயிர் பிழைத்து விட்டதாக அவருடைய காவியங்களில் உள்ளன.

தன்னுடைய 30 வயதில் கோட்டையை விட்டு வெளியேறி யாத்திரை செல்ல ஆரம்பித்தார். தன்னையே மறந்து கிருஷ்ணா பகவான் மீது அன்பு கொண்டு பாடல்களும் கவிதைகளும் எழுதி குவித்தார்.

இன்று வரை அவரின் பக்தி பாடல்கள் அனைவராலும் பாடப்படுகிறது. மீரா கிருஷ்ணன் மீது கொண்ட காதலால் துவர்காவில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

மார்ச் மாதம் 2ஆம் நாள் 1568ஆம் இவர் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ சான்று எதுவும் இல்லை.

அவர் இறந்து 150 வருடங்கள் கழித்தே அவருடைய படைப்புகள் நிறைய கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படுகிறது.

வரலாற்றில் இன்று March 02. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Previous articleINDvsNZ 2nd Test; 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூ சிலாந்து வெற்றி
Next articleAadvik Ajith Birthday: தல ரசிகர்கள் வாழ்த்து!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here