Home மருத்துவம் உலக தூக்க தினம்(World Sleep Day): ஆழ்ந்த தூக்கத்தின் பயன்கள்

உலக தூக்க தினம்(World Sleep Day): ஆழ்ந்த தூக்கத்தின் பயன்கள்

562
0

உலக தூக்க தினம் (World Sleep Day): ஆழ்ந்த தூக்கத்தின் பயன்கள்

இன்றைய காலக் கட்டத்தில் நாம் யாருமே ஆழ்ந்த உறக்கம் என்பதை அடைந்ததே இல்லை. மன அழுத்தம், நேரமின்மை ஆகிய காரணங்களினால் நாம் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒவ்வொரு வருடம் மார்ச் 15ஆம் தேதி உலக தூக்க தினமாக கொண்டாடப்படும். அதாவது தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதைப்பற்றி விழிப்புணர்வையும் எடுத்துக் கூறுவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

பெற்றோர்கள் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு செயலும் படிப்பாகட்டும் விளையாட்டாகட்டும் அது அவர்கள் எடுக்கும் ஓய்வை பொறுத்தது.

ஆரோக்கியமான உறக்கம் இல்லையென்றால் ஹார்ட் ஸ்ட்ரோக், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு கூட ஏற்படலாம்.

தூக்கமின்மை பசியை தூண்டும், அதாவது பசியை தூண்டும் கிரேலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களை தூண்டுகிறது.

சரியான தூக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகப்படியான அளவு சாப்பிடுகின்றனர்.

ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் லெப்டின் ஹார்மோன் குறைந்து கெர்லின் தூண்டப்படும். இதனால் பசியாக உணர்ந்தாலும் குறைவாக சாப்பிடுவீர்கள்.

தூங்குவதற்கு  முன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலரும் டிவி அல்லது திரைப்படம், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரையாவது தினமும் தூங்க வேண்டும். பெற்றோர்கள் தூங்கும் நேரத்தில் கண்டிப்பாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here