Home நிகழ்வுகள் தமிழகம் பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய சேலம் பெண்; விசாரணையில் அம்பலம்

பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய சேலம் பெண்; விசாரணையில் அம்பலம்

806
0
பொள்ளாச்சி
கோப்புப்படம்

பொள்ளாச்சி கும்பலுக்கு உதவிய சேலம் பெண்; விசாரணையில் அம்பலம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு உதவியாக சேலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் செயல்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் தன்னுடன் கல்லூரியில், விடுதியில் பயின்ற மாணவிகளை ஆபாசமாகப் படம் பிடித்து அதை திருநாவுக்கரசு கும்பலுக்கு அனுப்பிவிடுவாராம்.

மேலும் அம்மாணவிகளின் தொலைப்பேசி நம்பர், பெற்றோர்களின் தொலைப்பேசி நம்பர் ஆகியவற்றையும் சேகரித்து அனுப்பிவிடுவாராம்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து பொள்ளாச்சி பாலியல் கும்பல் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணிற்கு ஆபாச வீடியோவை அனுப்புவார்களாம்.

அப்பெண் பயப்பட ஆரம்பித்தால் அதை தங்களுக்குச் சாதகமாகக் பயன்படுத்திக்கொண்டு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வார்களாம்.

மேலும் அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் கறக்க முடியுமோ மிரட்டியே கறந்துவிடுவார்களாம். பணம் கொடுக்க இயலாத பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு ஆபாச வீடியோ கொடுத்து உதவிய அந்த இளம் பெண் தான் திருநாவுக்கரசு ஆந்திராவில் தலைமறைவாக இருக்கவும் உதவியுள்ளார்.

தற்பொழுது இந்த வழக்கில் சமந்தப்பட்ட அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here