கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 21 நாள் இந்தியா சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக வீட்டினுள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவு விடுமுறையை என்ன செய்யலாம் என்பதை துரை மோகன் ராஜு என்பவர் பேஸ்புக்கில் எழுதியது.
செய்வோமா…….
ஜவுளிக் கடைகளுக்கு யாரும் தினமும் போவதில்லை.
தியேட்டர்களுக்கு யாரும் தினமும் போவதில்லை.
மால்களுக்கு யாரும் தினமும் போவதில்லை.
— எனில் 144 தடை உத்திரவுவைப் பார்த்து பதட்டம் ஏன்?
காய்கறி கடைகள் திறந்து இருக்கும்.
பால், இறைச்சி கடைகள் திறந்து இருக்கும்.
மருந்து கடைகள் கண்டிப்பாக இருக்கும்.
இது போக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் கண்டிப்பாகத் திறந்து இருக்கும்.
ஓட்டல்கள் திறந்து இருக்கும்.என்ன அங்கே சென்று அமர்ந்து சாப்பிடக் கூடாது.பார்சல் மட்டும் வாங்கி வரலாம்.
அப்புறம் என்ன 144 தடை?
4 பேர்களுக்கு மேல் ஓரிடத்தில் கூடவே கூடாது.
இது கொரோனா காலம்.எனவே இரண்டு பேர்கள் கூட ஒரு இடத்தில் கூடி நிற்கக் கூடாது.
கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக பேருந்துகள் ஓடாது.டிரெயின்கள் ஓடாது….
இவ்வளவு தான் 144 என்பது…
வீட்டிலேயே இருங்கள்.அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே அதுவும் தேவைப்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள்.மற்றபடி குடும்பத்தோடு ஜாலியாக வீட்டில் இருங்கள்.
வேண்டியதை சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்ணுங்கள்.புது புது அயிட்டங்களை சமைத்துப் பாருங்கள்.வாங்கி வைத்து இதுவரை படிக்காமல் விட்ட புத்தகங்களைப் படியுங்கள்.
அதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதுங்கள்.பென்டிரைவில் இருக்கும் படங்களைப் பாருங்கள்.அந்தப் படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுங்கள்.
பிளாக் ஆரம்பித்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் என எதையாவது எழுதுங்கள்.ஹைட்ராக்சிகுளோரோகுயினைன் எப்படி வேலை செய்கிறது என்று தேடிப் படியுங்கள்.
நீல் ஆம்ஸ்டிராங் நிஜமாகவே நிலவுக்கு சென்றாரா என ஆரா யுங்கள்.மர்லின் மன்றோ இறந்தது எப்படி என தேடுங்கள்.தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள் என சிந்தியுங்கள்.
வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று விதம் விதமாக நடித்துப் பாருங்கள்.அதை டிக்டாக்கில் போடுங்கள்.குழந்தைகளுக்கு படம் வரைய கற்றுக் கொடுங்கள்.
அவர்களுக்குப் புரியாத பாடங்களை பொறுமையாக சொல்லித் தாருங்கள் அல்லது குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
வீட்டுக்குள் இட வசதி இருந்தால் சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுங்கள்.தியானம் செய்யுங்கள்.உறவினர்களிடம் வீடியோ கால் செய்து பேசுங்கள்…
ஆக மொத்தம் 15 நாட்கள் சந்தோசமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்…நம்மை யாரும்,எதற்காகவும் தேட மாட்டார்கள்…
— என ஏகப்பட்ட விசயங்களை செய்யச் சொல்கிறது அரசு….
இந்த சோதனையான காலகட்டத்தில் பொருளாதார இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.மறுப்பதற்கு இல்லை.
ஆனால் இந்த காலகட்டத்தை மட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வெற்றிகரமாக நாம் கடந்து விட்டால்,கொரோனாவை நாம் எப்படி பெற்றோம் என்ற வீரக் கதைகள் பேச நாமும் உயிரோடு இருப்போம்.நம் சந்ததிகளும் இருக்கும்.
செய்வோமா…….