Home நிகழ்வுகள் இந்தியா விவேகானந்தருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்; அடம்பிடிக்கும் பாபாஜி

விவேகானந்தருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்; அடம்பிடிக்கும் பாபாஜி

303
0
விவேகானந்தருக்கு பாரத ரத்னா

விவேகானந்தருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்; அடம்பிடிக்கும் பாபாஜி

சாதாரண நிலையில் இருந்த பாபா ராம்தேவ், யோகா வித்தையால் இந்தியா முழுவதும் விரிந்து பரவினார்.

திடீரென கோடிகளில் முதலீடு செய்து, பதஞ்சலி நிறுவனத்தை துவங்கி இந்தியாவின் இங்கு இடுக்குகளில் எல்லாம் தொழிலதிபராக பறந்து விரிந்தார்.

70 ஆண்டுகளாக இந்திய அரசு சாமியார்களுக்கு ஒரேஒரு பாரத ரத்னா விருது கூட கொடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் மத்திய அரசு பாரத ரத்னா விருதையும் பத்ம விருதுகள் பட்டியலையும் அறிவித்தது.

பாரத ரத்னா விருது மொத்தம் மூன்று பேருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மவிபூஷண் விருது 4 பேருக்கு, பத்மபூஷண் விருது 14 பேருக்கு, பத்மஸ்ரீ விருது 94 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ்,

சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சிவகுமார சுவாமிகள் ஆகியோர் நாட்டுக்கு அளப்பரிய தொண்டினைச் செய்துள்ளனர். எனவே, அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here