Home நிகழ்வுகள் இந்தியா ஆணவக் கொலையால் இறந்த கணவன்: உயிருடன் மீண்டும் வந்த அதிசயம்!

ஆணவக் கொலையால் இறந்த கணவன்: உயிருடன் மீண்டும் வந்த அதிசயம்!

580
0
ஆணவக் கொலையால் இறந்த கணவன்

ஆணவக் கொலையால் இறந்த கணவன்: உயிருடன் மீண்டும் வந்த அதிசயம்!

ஆணவக்கொலை என்பது இல்லாத மாநிலமே கிடையாது. எந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் ஜாதி வெறியுடன் உள்ள மக்கள் அதிகமாகவே உள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு ஆணவப் படுகொலை நிகழ்ந்தது. அந்த மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நல்கொண்டா மாவட்டம், மிர்யாளகுடா பகுதியைச் சேர்ந்த பெருமாள பிரனாயும், அம்ருதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பிரனாயி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அம்ருதா, மேல்வகுப்பைச் சேர்ந்த வசதியான  குடும்பத்து பெண்.

இதனால் ஜாதி வெறி தாண்டவம் ஆடியது. அம்ருதாவின் தந்தை அனுப்பிய ஆட்களால் பினராயி கொள்ளப்பட்டார்.

கடந்த வருடம் செப்டம்பர் 14-ம் தேதி கர்ப்பிணியான அம்ருதாவைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பியபோது கூலிப்படையினரால் பினராயி கொள்ளப்பட்டார்.

கணவரை இழந்து வாடிய அம்ருதாவிற்கு தற்பொழுது ஆண்குழந்தை பிறந்தது. கணவர் கொலையான 5 மதங்களுக்குப் பிறகு, அவர் வாழ்வில் மகிழ்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்னுடைய கணவரே எனக்கு மீண்டும் உயிருடன் என் குழந்தை ரூபத்தில் திரும்பி வந்துள்ளதாக அம்ருதா தெரிவித்துள்ளார்.

Previous articleராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்: பாஜக இருக்கும் வரை விடுதலை இல்லை!
Next articleசிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here