Home சிறப்பு கட்டுரை மழையின் போது மண்வாசம் ஏன் உருவாகின்றது தெரியுமா?

மழையின் போது மண்வாசம் ஏன் உருவாகின்றது தெரியுமா?

474
0
மழையின் போது மண்வாசம்

மழையின் போது மண்வாசம் ஏன் உருவாகின்றது தெரியுமா? டிம் லோகனின் ஆராய்ச்சி முடிவுகள்.

மழையின் போது ஒரு வகையான மண்வாசனை உருவாகும். உண்மையில் அது மண்ணின் வாசம் கிடையாது. ஒரு சில பாக்டீரியாக்களால் உருவாகும் வாசனையாகும்.

இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. இறுதியாக, டிம் லோகன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியல்  பேராசிரியர், ஆராய்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார்.

அந்த மண்வாசனையை, பெட்ரிகோர் (Petrichor) எனக் குறிப்பிட்டுள்ளார். பெட்ரிகோர் என்றால், மழையின்போது உருவாகும்  மண்வாசனை என்று பொருள்.

வறண்ட நிலம் அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகு மழையானது, பூமியின் நிலப்பரப்பை அடையும்போது, இந்த வகையான மண்வாசனை உருவாகும்.

ஸ்ட்ரெப்டோமைசிஸ் மற்றும் சைனோ பாக்டீரியா மூலம் ஏற்படும் வேதியியல் வினைகளால், பெட்ரிகோர் வாசம் உருவாகிறது. இந்த வேதியியல் மாற்றத்திற்கு ஜியோஸ்மின் (Geosmin) என்று பெயர்.

ஸ்ட்ரெப்டோமைசிஸ் மற்றும் சைனோ பாக்டீரியா இவை மண்ணில் கலந்திருக்கும் பாக்டீரியா. இறந்த உயிர்களை சிதைக்கும் வேலைகளிலும் இவ்வகை பாக்டீரியா ஈடுபடும்.

இவ்வகை பாக்டீரியா மீது தண்ணீர் படும்போது, உடனே வேதிவினை நடைபெற்று பெட்ரிகோர் வாசத்தை உருவாக்குகின்றது.

வாசல் தெளிக்கும்போது கூட பெட்ரிகோர் வாசத்தை உடனே உணர முடியும்.

Previous article7 சர்வேதேச நடிகர்களை வீழ்த்தி விருது வென்ற விஜய்
Next articleReview Chekka Chivantha Vaanam | செக்கச்சிவந்த வானம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here