Home அறிவியல் விக்ரம் லேண்டரை மறந்த இஸ்ரோ; தேடிக்கண்டுபிடித்த தமிழர்

விக்ரம் லேண்டரை மறந்த இஸ்ரோ; தேடிக்கண்டுபிடித்த தமிழர்

541
0
விக்ரம் லேண்டரை

விக்ரம் லேண்டரை மறந்த இஸ்ரோ; தேடிக்கண்டுபிடித்த தமிழர்

நிலவின் தென்துருவப் பகுதிக்கு முதல் முறையாக இஸ்ரோ சந்திராயன்-2 செயற்கைக்கோளை அனுப்பியது.

நிலவில் தரையிறங்கி தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை ஆராய்ச்சி செய்வதற்காக விக்ரம் லேண்டரும் அதனுடன் சென்றது.

சந்திராயன்-2 நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டாலும், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க மூன்று நிமிடம் இருந்த நிலையில், தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ மற்றும் நாசாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

சந்திராயன்-2 மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை படம்பிடித்தும் அதை பற்றி சரியாக கண்டறிய முடியவில்லை. இதன்பின் இதை இஸ்ரோவே மறந்துவிட்டு ககன்யான் திட்டத்திற்குச் சென்றுவிட்டது.

சந்திராயன்-2 விண்கலம் எடுத்த படத்தை ஒவ்வொரு பிக்சலாக ஆராய்ச்சி செய்து மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியம் என்பவர் கண்டறிந்து உள்ளார். இதை நாசாவும் அங்கீகரித்து உள்ளது.

ஒரு பிக்சல் என்பது 1.25 மீட்டர் ஆகும். விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை இரண்டு சதுர கிலோமீட்டர் வரை ஒவ்வொரு பிக்சலாக ஆய்வு செய்து இத்தனை நாள் கழித்து இதைக் கண்டறிந்து உள்ளார் சண்முகம்.

Previous articleதமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி ஒப்படைக்கப்படும் – கோத்தபய
Next articleசிமோகா சிறையில் விஜய்; மீண்டும் கைதியா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here