முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
தமிழ்நாடு: கருப்ப கௌண்டர் பழனிசாமி 1954 மே 12-ல் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சசிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த இவரது பெற்றோர் கருப்பகவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆவர். இவர் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் வெல்லம் வியாபாரம் செய்துவந்தார்.
இவரது மனைவி ராதா மற்றும் இவரது மகன் மிதுன் ஆவர். 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
இதன்பின்னர் 2016-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜே.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தததை அடுத்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாட்டின் முதர்வராக பதவியேற்றார்.
அஇஅதிமுக கட்சியின் தலைவராகவும் திரு.பழனிசாமி இருந்துவருகிறார். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களும் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.