எதிர்கால இந்தியா புத்தகம் Ethirkala india katturai pdf

    279
    0

    எதிர்கால இந்தியா புத்தகம் [Ethirkala india book katturai pdf download]. இந்தியாவின் எதிர்காலம் பற்றி சுவாமி சித்பவானந்தர், சுவாமி விவேகானந்தர் என்ன கூறியுள்ளனர்?

    எதிர்கால இந்தியா – Ethirkala India

    இப்புத்தகத்தின் ஆசிரியர் சுவாமி சித்பவானந்தர். இப்புத்தகத்தில் இந்தியா இதற்கு முன் எப்படி இருந்தது, எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என விரிவாக கூறியுள்ளார்.

    எதிர்கால இந்தியா புத்தகத்தில் இடம் பெற்ற முக்கியமான வரிகள் சில உங்கள் பார்வைக்கு.

    “சில நூற்றாண்டுகளாக இந்தியாவின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் செல்வம் எவ்வளவு தூரம் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதைக் கணக்கிட முடியாது.

    தன தானிய லட்சுமி தாண்டவமாடும் இந்நாட்டில் வறுமை எஞ்சி நிற்கிறது. பட்டினி கிடந்தது உயிர் பிழைத்திருக்கிறது. உலகில் வேறு ஒரு நாடு இப்படி கொள்ளையடிக்கப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அழிந்திருக்கும்.

    இன்னும் சில நாடுக்களில் ஒன்றுமே இல்லாமல் பிற நாட்டை கொள்ளையடித்தே வாழும் நாடுகளாக இருந்துள்ளது. ஆனால், இந்தியா மட்டும் எத்தனையோ இன்னல்களை கடந்தும், கொள்ளைகளை கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

    இந்தியாவின் உயிர்நாடி கொட்டுபோகவில்லை. உயிர்நாடி வழுவிழந்தால் உடலுக்கு அழிவு வந்துவிடும். பல இன்னல்களுக்கு ஆளானாலும் அதன் உயிர்நாடு தாக்கப்படவில்லை.

    இந்தியாவுக்கு அறிவு இருக்கிறது ஆனால் ஆற்றல் போதாது. கல்லிடனிடத்துக் கடவுள் சொரூபத்தைக் காணமுயலுகின்ற ஒருவன் மக்களிடத்துக் கடவுளைக்காண மறுப்பானாகில் பேதைமையுள் அது பெரும் பேதைமையாகும்.”

    இப்படி இந்தியா ஜாதி, கடவுள் என பலவாறு பிரிந்து அடிமைப்பட்டிருந்தது என இந்தியாவின் இறந்தகாலத்தை தெளிவாக விளக்கி கூறியுள்ளார்.

    இந்தியாவின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? கல்வித்திட்டம், மாணவர்கள், பொருளாதாரம், அரசாங்கம், ராணுவம், சமுதாயம், நாகரிகம் என அனைத்தும் எப்படி இருக்க வேண்டும் என விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

    எதிர்கால இந்தியா பற்றி விவேகானந்தர் கூறியது

    சுவாமி விவேகானந்தர் எதிர்கால இந்தியா pdfஎதிர்கால இந்தியா பற்றி விவேகானந்தர் என்ன கூறினார் என்பது பற்றியும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

    “இந்தியா மாண்டுபோமா? அப்படியாயின் உலகத்தினின்று அருள் ஒளி அணைந்துவிடும், நல்லொழுக்கம் அறவே அற்றுப்போம்; தர்மத்தின்மீது மக்கள் வைக்கும் இனிய வாஞ்சை நசித்துவிடும்; உயர் நோக்கம் ஒழிந்துபோம்.

    இவைகளுக்குப் பதிலாக ஆசையும், போகமுமே தேவதைகளாகத் திகழும்; பணம் அவைகளுக்கு அர்ச்சகத் தொழில் புரியும். கபடமும், பலாத்காரமும், போட்டியும் இப்புதிய தேவதைகளுக்கு குற்ற ஆரதனைகளாகும்.

    ஆத்மீகமோ பலியாக வீழ்த்தப்படும். ஆனால், இத்தகைய சீர்கேடு வந்துவிடாது. ஆக்கிரமிப்பு என்னும் சக்தியைக் காட்டிலும் துயரத்தைச் சகிக்கும் சக்தி பன்மடங்கு பெரியது.

    வெறுப்பினின்று உதிக்கும் சக்தியைக் காட்டிலும் அன்பினின்று ஊறும் சக்தி எல்லையற்றது. இப்போது இந்தியா புத்துயிர்பெற்று எழுந்திருப்பது வெறும் ஆத்திரத்தால் விளையும் கிளர்ச்சி என்று எண்ணுபவர் ஏமாற்றமடைபவராவர்.”

    Ethirkaala india book pdf download

    எதிர்கால_இந்தியா_புத்தகம்_ethirkala_india.pdf

    இது ஒரு சாம்பிள் புத்தகம் தான் முழு புத்தகம் டவுன்லோட் செய்ய tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009385_எதிர்கால_இந்தியா.pdf

    Previous articleஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன்
    Editor in Chief & Founder of MrPuyal.com

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here