அஜிங்கியா ரஹானே; ரசிகர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தலாம், கொரோனா தொற்று பரவாமல் இருக்க ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் விளையாடுவார்கள்.
கொரோனா நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனைவரும் சமூக விலகல், ஊரடங்கை கடைபிடித்து வீட்டிலேயே இருக்கின்றனர்.
இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பேசி வருகின்றனர். இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பேசிய ரஹானே ஐபிஎல் தொடர் எதிர்பார்ப்பை பற்றி கூறினார்.
ரசிகர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் இல்லாமல் வீரர்கள் விளையாடலாம். அது எனக்கு சரியாகப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் தான் ஒரு விளையாட்டின் தூண்.
ஐபிஎல் ஆக இருக்கட்டும் பிற விளையாட்டாக கூட இருக்கட்டும் ரசிகர்கள் வீட்டில் இருந்து பார்க்கலாம். அதுவும் அவர்களுக்கு ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என கூறியுள்ளார்.