Home விளையாட்டு இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பான்டியா

இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பான்டியா

286
0

தென் ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் போட்டி இந்திய அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

வருகிற மார்ச் 12ம் தேதி தொடங்க உள்ள இந்த போட்டி முதல் கொடி தர்மசாலாவில், இரண்டாவது போட்டி லக்னோவில், மூன்றாவது போட்டி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.

நேற்று ஏற்கனவே டீ காக் தலைமையில் 16 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது..

இன்று பிசிசிஐ இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. காயம் காரணமாக ரோகித் சர்மா விலகி உள்ளார்.

விராத் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரே இந்த தொடரில் கேப்டனாக தொடர்கிறார்.

தவான், பான்டியா ரிட்டன்ஸ்

காயம் காரணமாக விலகியிருந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம் .

அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் திரும்பியுள்ளார் இதனால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசை பலம் வாய்ந்ததாக உள்ளது.

நியூசிலாந்துக்கு ஒரு நாள் தொடரில் மயங்க் அகர்வால் ஷிவம் டுபே கேதர் ஜாதவ் சரியாக விளையாடாவிட்டால் அவர்களை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர் ஷப்னம் கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விபரம்

வீராத் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, குல்திப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, சஹால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷப்னம் கில், நவ்தீப் சைனி.

Previous articleஇந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்
Next articleசூரரைப் போற்று சிங்கிள் டிராக் எப்போது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here