Home Latest News Tamil ராணுவத் தொப்பியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி

ராணுவத் தொப்பியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி

356
0

ராணுவத் தொப்பியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவத் தொப்பியை அணிந்து விளையாடுகிறது.

மேலும் கேப்டன் கோலி இந்த போட்டிக்கான சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் உயிரழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம் எனக்கூறினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்று இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைபற்றும் முனைப்புடன் இந்தியாவும் எப்படியாவது முதல் வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலியாவும் களம் இறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தது. களம் இறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here