Home நிகழ்வுகள் கோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா

கோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா

704
0
கோலியின் தொடர் தோல்வி

கோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது.

இரண்டு அணிகளுமே மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைக் கண்ட அணிகள். எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவருக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது. ஆனால், கோலி தலைமையிலான அணி நான்காவது தொடர் தோல்வியைத் தழுவி உள்ளது.

இந்தப் போட்டியில் நிச்சயம் ஆர்சிபி வென்றுவிடும் என நினைத்த நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்றைய போட்டியின் தோல்வியால் அனுஷ்கா சர்மா விடிய விடிய தூக்கம் இல்லாமல் மனவேதனை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous article#RCBvsRR கடைசி இடம் யாருக்கு; கடுமையான மன உளைச்சலில் கோலி
Next articleமும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here