Anushka; ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி: அனுஷ்கா! நடிகை அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பாலோயர்ஸ்களை கடந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அருந்ததி என்ற த்ரில்லர் படத்திலும், ருத்ரமாதேவி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றவர்.
தமிழில், தல அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், ஆர்யா, விக்ரம், சிம்பு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நிசப்தம் என்ற தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களுக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது, நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி. நீங்கள் அனைவரும் பொறுப்புடன் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.