Home சினிமா கோலிவுட் கொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து!

கொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து!

319
0
Corona Virus

Corona Virus; கொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து! கொரோனாவுக்கு யாரும் படயப்பட வேண்டாம், மனதை மட்டும் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரி, ஷாப்பின் மால்ஸ், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி

கொரோனா வைரஸ் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். மனதை மட்டும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான். வேறு யாரும் வரமாட்டார்கள்.

கூடப்பிறந்த உறவினர்கள் கூட நம்மை தொட்டு பேசுவதற்கு தயங்கும் இந்த நேரத்தில் நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி என்று மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

ரம்யா சுப்பிரமணியம்

அனைவரும் வேலை செய்யும் இடங்களிலும் கை அழம்புவதற்கு liquid wash வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் எங்கும் சென்று வந்தால் கைல் அலம்பும் வேண்டும்.

Tissue வாங்கி வைத்துக் கொண்டு அதனை பயன்படுத்த வேண்டும். யாரையும் ஒதுக்கி வைக்க வேண்டாம். அவர்களையும் நாம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து சூர்யா, ஆர்யா, காஜல் அகர்வால் ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு சேலஞ்ச் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஷால்

கொரோனா வைரஸ்க்கு எதிரான இந்த போரில் அனைவரும் வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், உட்புறமாகவும் இருக்க வேண்டும்.

கொரோனாவை ஒழிப்பதற்கு உயர்ந்த சுகாதாரத்தை பராமரிக்க இந்த செய்தி குறித்து அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஇன்று புனீத் ராஜ்குமார் பிறந்தநாள்!
Next articleமீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here