Ritu Varma Wedding; கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரிது வர்மாவிற்கு கல்யாணம்? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரிது வர்மாவிற்கு கல்யாணம் என்று தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
ரிது வர்மாவிற்கு திருமணம் என்று தகவல் வெளியாகி வருகிறது.
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. இந்தப் படத்தைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கலக்கலான ஜாலி த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 2 உருவாக இருப்பதாக இயக்குநர் அறிவித்திருந்தார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே ரிது வர்மா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் குறித்து ரிது வர்மா கூறுகையில்,
தனது பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், நான் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன். காதல் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.