Home சினிமா கோலிவுட் புதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்!

புதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்!

275
0
Kamal Haasan

புதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்! ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக எளிமையான கதையை எழுதியுள்ளார். லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் வெளியிடுவதற்கு என்று எளிமையான கதை ஒன்றை கமல் ஹாசன் எழுதியுள்ளார்.

நடிகர், இயக்குநர், டான்சர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் தற்போது புதிய கதை ஒன்றை எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் முடிந்த பிறகு கமல் ஹாசன் எழுதியிருக்கும் புதிய படத்தின் கதைக்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறைந்தபட்ச படக்குழுவினர் மற்றும் ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டுமே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள்.

கமல் இந்தப் படத்தில் நடிப்பாரா? இயக்குவாரா? அல்லது தயாரிப்பாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்த பிறகு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும். இதற்காகவே கமல் புதிய படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

இந்தியன் 2 மற்றும் தலைவர் 169 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here