Home Latest News Tamil சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு

சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு

578
0
சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்

சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு

சிம்பு என்றால் உடனே பலரும் வம்பு என ஒதுங்கிய காலம் அது. வாலு என்று அவருடைய படத்திற்கு பெயர் வைத்தது பக்காவாக பொருந்தியது.

அன்று சிம்பு செய்த சேட்டைகள், மைக்கல் ராயப்பன் வடியில் வினையாக மாறி இன்று வரை குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

சிம்பு, ஏன் AAA படத்தில் நடிக்க மறுத்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்து பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என மாறியது. பன்னீர் செல்வத்தை சந்தித்து நடிகர் லாரன்ஸ் பொன்னாடை போர்த்தினார்.

இதனால், சசிகலாவும் தனக்கு ஆதரவாக ஒரு நடிகர் தேவை என துலாவியுள்ளார். அந்த சமயத்தில் சிம்பு வீட்டு முன் அதிமுக கொடியுடன் வரிசையாக கார்கள் இருந்துள்ளது.

சிம்புவை சூட்டிங் போகலாம் என தயாரிப்பாளர் வெளியே அழைத்துள்ளார். வெளியில் வந்த சிம்புவுக்கு அதிர்ச்சி.

வீட்டுமுன் அதிமுக கொடியுடன் கார்கள் வரிசைகட்டி நின்றுள்ளது. இதனால் மைக்கல் ராயப்பன் தன்னை கடத்த வந்துள்ளார்.

கடத்திக்கொண்டு கூவத்தூர் விடுதிக்கு சென்று விடுவார் என உடனே வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டாராம்.

இதன் காரணமாகவே மைக்கல் ராயப்பன் படத்தில் சரிவர நடிப்பதில்லை. இதனாலேயே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள பத்திரிக்கையாளர் அந்தணன் அவருடைய யுடியூப் சேனலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உண்மையில் சசிகலா சிம்புவை கடத்தி வரச் சொன்னாரா? அல்லது சிம்புவே அப்படி கற்பனை செய்துகொண்டாரா? இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here