தளபதி விஜய் சச்சின் திரைக்கு வந்து 15 வருடம் கடந்தது! விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படம் திரைக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் கடந்துவிட்டது.
சச்சின் படம் திரைக்கு வந்து 15 வருடங்கள் கடந்துவிட்டது.
இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலீயா, பிபாசா பாசு, சந்தானம் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வந்த படம் சச்சின்.
ரொமான்டிக் காமெடி கலந்த காதல் ஈகோ கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனாக நடித்திருந்தார்.
கல்லூரியில் படிக்கும் விஜய் (சச்சின்), தன்னுடன் படிக்கும் ஜெனிலீயா (ஷாலினி)யை நேசிப்பார். ஆனால், ஜெனீலியா அவரை விரும்பமாட்டார். முதலில் எதிரிகளாக இருந்து பின்னர் நண்பர்களாக பழகுவார்கள்.
ஒரு கட்டத்தில் விஜய்க்கு, ஜெனிலீயாவிற்கு 30 நாட்கள் டைம் கொடுப்பார். அதற்குள்ள தன்னை காதலிக்க வைப்பதாக சபதம்.
ஆனால், அடுத்த கொஞ்ச நாட்களிலேயே விஜய் மீது காதல் கொண்ட ஜெனிலீயா அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தமாட்டார். காரணம் ஈகோ.
ஒரு கட்டத்தில் கல்லூரி வாழ்க்கையும், முடிந்து, ஜெனிலீயாவிற்கு விஜய் கொடுத்த 30 நாட்கள் கால அவகாசமும் முடிந்து விஜய் கோயம்புத்தூரிலிருந்து கிளம்ப விமான நிலையத்திற்கு வருவார்.
அவரை பாலோ பண்ணி ஜெனீலியாவும் வருவார். இறுதியாக காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்று சேர்வார்கள் இதுதான் படத்தின் கதை.
ஆனால், என்ன இந்தப் படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அதில், குண்டு மாங்கா தோப்புக்குள்ள, வா வா வா என் தலைவா, கண்மூடி திறக்கும்போது, வாடி வாடி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்தது.
இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதன் காரணமாக 15YearsOfSachein என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, இன்று விஜய்யின் மனைவி சங்கீதா தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மேலும் தெறி படம் 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதோடு, தெறி படத்தின் ஆல்பம் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.