Home நிகழ்வுகள் தமிழகம் நாகர்கோவில் காசியை உச்சா போகும் அளவுக்கு துடிக்கதுடிக்க அடித்த போலீஸ்

நாகர்கோவில் காசியை உச்சா போகும் அளவுக்கு துடிக்கதுடிக்க அடித்த போலீஸ்

27042
0

100 பெண்களுக்கு மேல் காதலிப்பதாக ஏமாற்றிய காதல் கிருக்கன் நாகர்கோவில் காசி, வலுவான உடற்கட்டமைப்பு கொண்ட இளைஞர் பல பெண்களின் வாழக்கையில் செய்த வந்த லீலை வெளிவந்தது.

நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான காசி என்ற இளைஞர் பள்ளி மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை நாடகக் காதல் செய்து ஏமாற்றியுள்ளார்.

பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளான் இந்த காசி. அவரிடம் பழகி எடுத்த அந்தரங்க படங்களை வைத்து பெண் மருத்துவரை மிரட்டி வந்துள்ளான்.

அதில் பயந்த அவர் கேட்கும்போதெல்லாம் பணம் என 5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அவர் போலீஸிடம் புகார் அளித்து விட்டார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல போலீஸ் வலையில் சிக்கி கொண்டான் காசி. இதன் பிறகே அவனுடைய மொபைல் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் பரிசோதிக்கப்பட்டது.

அதில் அவனிடம் பாதிக்காப்பட்ட பெண்கள் 120 வரை இருந்துள்ளனர். அதில் பள்ளி பருவ மாணவிகள், இளம் பருவத்தினர் மற்றும் நன்கு படித்து வெளி உலகம் தெரிந்த இந்த மருத்துவர் என பலர் இருந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தான் பெரிய பணக்காரன், பெரிய இடம் போன்றவாறு உருவகம் செய்து நல்ல உடற்கட்டான புகைப்படங்களுடன் பதிவு செய்து கணக்கு பயன்படுத்தி வந்துள்ளான்.

இவனிடம் சிக்கியவர்களில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்பு கொண்டவர்களே. அவர்களை காதலிப்பதாக திருமணம் செய்வதாக கூறி நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளான்.

பிறகு பழகிய பெண்களை நேரில் வரச்செய்து ஊர் சுற்றவும் அதை புகைப்படம் எடுக்கவும் செய்துள்ளான். மேலும் பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளான்.

ஒரு கட்டத்திற்கு பிறகு தான் வைத்திருக்கும் அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை தொடங்கியுள்ளான்.

பணம் தர அவர்கள் மறுத்தால் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என பகிரங்கமாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். இறுதியில் பொறியில் சிக்கிய எலியைப்போல போலீசின் பிடியில் மாட்டிக்கொண்டான்.

போலீஸ் இவன் லீலைகளை பார்த்து அதிர்ந்து, பெண்களை எப்படி டார்சர் செய்தானோ அதேபோல் டாச்சர் செய்து துடிக்க துடிக்க ஸ்டேசனுக்குள் வைத்து துவைத்துள்ளனர். இதில் இருந்த இடத்திலேயே காசி உச்சாபோய்விட்டான்.

அன்று பொள்ளாச்சி கும்பல், அதன் பிறகு காதல் மன்னன் கண்ணன் தற்போது நாகர்கோயில் காசி என இவனை போன்ற ஸ்லீப்பர் செல்ஸ் இன்னும் எத்தனை பேர் இருக்கிறாங்கனு தெரியவில்லை.

Previous articleபேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல்
Next articleஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here