Home சினிமா கோலிவுட் எனக்கு திருமணமா? சினிமாவை விட்டு போறேனா? வரலட்சுமி சரத்குமார் கோபம்!

எனக்கு திருமணமா? சினிமாவை விட்டு போறேனா? வரலட்சுமி சரத்குமார் கோபம்!

288
0
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar; எனக்கு திருமணமா? சினிமாவை விட்டு போறேனா? வரலட்சுமி சரத்குமார் கோபம்! எனது திருமணத்தை ஏன் என்னை விட மற்றவர்கள் அதிகளவில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன், எனது திருமணத்தில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காட்டேரி, பாம்பன், சேஸிங், டேனி, பிறந்தாள் பராசக்தி ஆகிய தமிழ் படங்களிலும், க்ராக் என்ற தெலுங்கு படத்திலும், ரணம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தொடர்ந்து தான் சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. இதனால், அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த வரலட்சுமி, தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் என்ற விஷயம், அனைவருக்கும் தெரிந்த பிறகு தான் எனக்கு கடையாக தெரிகிறது. ஏன்?

எனக்கு திருமணம் என்பதே முட்டாள்தனமான வதந்திதான். அதெப்படி எனது திருமணத்தில் மட்டும் அனைவருமே ஆர்வமாக இருக்கிறார்கள்.

எனக்கு திருமணம் என்றால், நான் அதை கூரை மீது ஏறி அறிவிப்பேன். இப்போதைக்கு எனக்கு திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்கும் போடவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகமல் கொடுத்த பரிசு: போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய ஹாலிவுட் நடிகை!
Next articleஜிவி பிரகாஷ் – கௌதம் மேனன் கூட்டணிக்கு விஜய் பட பாடல் டைட்டில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here