Home சினிமா கோலிவுட் பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்!

பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்!

251
0
Elizabeth Helen

Elizabeth Helen; பெண் இன்ஸ்பெக்டரை நீக்க வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்! பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும் என்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் துணை கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பீட்டர் பால் – வனிதா திருமணம் குறித்து விசாரிக்கும் பெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும் என்று எலிசபெத் ஹெலன் சென்னை துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால், அதன் பிறகு நடித்த எந்தப் படமும் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவகாரத்து செய்தார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும், கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் எலிசபெத் ஹெலன், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரில் சரியான விசாரணை நடத்தவில்லை என்றும், பெண் இன்ஸ்பெக்டரை மாற்றி, வேறு இன்ஸ்பெக்டரை விசாரணைக்கு அனுமதித்தால் தனக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரதமர் நரேந்திர மோடி, இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியை பார்வையிட்டு, இராணு வீரர்களுடன் உரையாற்றினார்
Next articleகடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here